
அமெரிக்காவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிமுக்கு எழுதிய கடிதத்தில், லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது ஈரானின் பொறுப்பு என்று காமேனி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 21 அன்று லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்தித்தபோது, இஸ்ரேல் வெளியேறுவது மற்றும் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.