
ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து 9 நாட்டிகல் மைல் தொலைவில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கப்பலின் எஞ்சின் அறை முழுவதும் சேதமடைந்த நிலையில், கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் ஓமன் கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹர்முஸ் ஜலசந்தி அருகே நடந்த இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.