
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளிநாடுகளுக்கு வெளியேற்றும் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி முதல் ஆண்டில் 2,50,000 பேரும், அடுத்த ஆறு ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்களும் வெளியேறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வது போர்க்குற்றமாகக் கருதப்படும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து சர்வதேச அளவில் கண்டனங்களை ஈர்த்துள்ளது.