
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற துலீப் கோப்பை இறுதிப் போட்டியில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
கிழக்கு மண்டல அணி இஷான் கிஷனின் சதத்துடன் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
சூர்யவன்ஷி ஆட்டமிழந்த பிறகு, அவரைப் பார்க்கக் கூடியிருந்த ரசிகர்களில் ஒரு பகுதியினர் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.