
தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை மற்றும் பேட்டரி வாகனங்கள் வழங்கப்படும் என்ற அமைச்சர்களின் உறுதியை ஏற்று, 16 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை பணியாளர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
அடுத்த மாதம் முதல் உணவுப் படியாக தலா ரூ.50 வழங்கவும், 200 வார்டுகளில் 197 வார்டுகளில் ஒரு மாதத்திற்குள் கழிப்பறை வசதி ஏற்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அக்டோபர் 3-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.