
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட 12,000 கனஅடி நீர், இன்று மதியத்திற்குப் பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி நீர் பிரச்சினைக்கு மேகேதாட்டு அணையே இறுதி தீர்வு என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவின் 4 அணைகளில் தற்போது 57 டிஎம்சி நீர் இருப்பு உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை திறந்துவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.