
தமிழகத்தில் செப்டம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை அடுத்த 6 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால் இந்த மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், உள் தமிழகத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.