
விண்வெளியில் ஒரு சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவில் சுற்றி வரும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கழிவுகளைக் கண்காணிக்க, சீனா தனது முதல் 'கண்டே' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 120 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் முதல் செயற்கைக்கோள், லிஜியன்-1 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.
இந்தத் திட்டம் 2030-ம் ஆண்டிற்குள் மூன்று கட்டங்களாக முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.