
குழந்தைகளின் தனியுரிமைச் சட்டத்தை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கில், டிக்டாக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் ரூ.3,828 கோடி தொகைக்குச் சமரசம் செய்துள்ளது.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தகவல்களைப் பெற்றோர் அனுமதியின்றிச் சேகரித்ததாகவும், கணக்குகளை நீக்கக் கோரியும் டிக்டாக் செயல்படவில்லை என்றும் 2024-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்தச் சமரசத்தின்படி, டிக்டாக் நிறுவனம் ரூ.2,871 கோடி உடனடியாகவும், மீதமுள்ள ரூ.957 கோடியைப் பின்னரும் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.