
OpenAI, Google, Microsoft உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மருத்துவமனைகள் மற்றும் மின்சார நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளன.
AI கருவிகள் மூலம் தாக்குதலாளர்கள் பாதுகாப்பு குறைபாடுகளை வேகமாக அடையாளம் கண்டு, மனித கண்காணிப்பு இல்லாமலேயே சிக்கலான தாக்குதல்களைத் தானியக்கமாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள நிறுவனங்கள் தங்களுக்குள் பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.