
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடந்த 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் மகேஷ் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
காலை 11 மணியளவில் தொடங்கி மாலை 6 மணி வரை நீடித்த இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலீசார் கேட்ட 295 கேள்விகளில் 245 கேள்விகளுக்கு பதிலளித்ததாக தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் அடுத்த வாரம் அழைக்கும் போது பதிலளிக்க காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.